Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
 » சென்னை
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
தமிழகம்
 
பண்ருட்டி: பேருந்து விபத்து 2 டிரைவர்கள் பலி; 50 பயணிகள் காயம்


பண்ருட்டி, பிப்.8   சென்னைநோக்கி கும்பகோணத்திலிருந்து வந்து கொண்டிருந்த தமிழக அரசு விரைவு பேருந்தும், சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் பருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பயணிகள் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தமிழக அரசு விரைவு பேருந்து சென்னைக்கு புறப்பட்டது. கும்பகோணத்தை சேர்ந்த ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (வயது 57) இந்த பேருந்தை ஓட்டி வந்தார். நள்ளிரவு 2.15 மணியளவில் பண்ருட்டி அருகே சூரக்குப்பம் அண்ணாநகர் மெயின் ரோட்டில் அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்தும், அரசு விரைவு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
 
இந்த விபத்தில் 2 பேருந்துகளின் முன்பக்கமும் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.
 
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வண்டிகள், 10 அம்புலன்ஸ் வண்டிகள் வரவழைக்கப்பட்டன. பலியான டிரைவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பொக்லின் எந்திரத்தை வர வழைத்து விபத்துக்குள்ளான 2 பஸ்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
 
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    Print        Tell friend        Top


Other Articles:
கடலோர பாதுகாப்புக்கு அதி நவீன படகுகள் (02.08.2010)
விமான கட்டணம் குறைப்பு - பயணிகள் மகிழ்ச்சி (02.06.2010)
ராகிங் கொடுமை:கல்லூரி மாணவன் தற்கொலை (02.06.2010)
ராதாகிருஷ்ணன் பதவி பறிப்பு (02.05.2010)
அழகிரியுடன் அதிமுக எம்எல்ஏ சந்திப்பு (02.05.2010)
உள்ளாட்சி தேர்தல்: மகளிருக்கு 50% இடஒதுக்கீடு - ஸ்டாலின் (02.05.2010)
தொலைபேசி கட்டணம்: அமைச்சருக்கு நோட்டீஸ் (02.04.2010)
கோவை வ.உ.சி. உயிரினப் பூங்கா இடமாற்றம்?! (02.03.2010)
ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் சதாபிஷேக விழா (02.03.2010)
கோவையில் சாலை மறியல் (02.03.2010)



 
::| Hot News
தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
கல்லூரி மாணவர் கொலை: பொறியியல் மாணவர்கள் 8 பேர் கைது