ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்தியா தகுதி
புதுதில்லி, மார்ச்.9 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு 9 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ஈரானில்
தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில்
நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் வெங்கட் நாகர்ஜுன் 2-1
என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் வீரர் அப்சினை வீழ்த்தி அரையிறுதிக்கு
முன்னேறினார். மற்ற காலிறுதிப் போட்டிகளில் இந்தியாவின் ஹர்பல் சிங் 7-2
என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜாமின் வூவையும், சுமிட் சங்வான் 8-0
கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஹசனோவையும் வீழ்த்தினர்.
முன்னதாக
இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் தேவேந்திர சிங், சீனிவாஸ், விகாஸ்
கிஷன், நவீன் குமார், மனோஜ் குமார், ரஜாட் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
|