நாடாளுமன்றம் முன் பிஜேபி ஆர்ப்பாட்டம்
புதுதில்லி, மார்ச்.9 பிஜேபி கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தின் முன் மறியலில் ஈடுபட்டனர்.
பிஜேபி
மகளிர் அணியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோ ர் இன்று காலை (மார்ச்9)
நாடாளுமன்ற வாயில் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மசோதாவை
நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பிய அவர்கள்
பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்தும்
கோஷங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றத்துக்குள் மறியல் காரணமாக
எம்பிக்கள் சிலர்செல்ல முடியாமல் தவித்தனர். இதனிடையே காவலர்கள் விரைந்து
வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.பிஜேபி
தொண்டர்களின் மறியலால் நாடாளுமன்ற வளாகம் முன் பரபரப்பு நிலவியது.
|