மாநிலங்களவையில் ரகளை: அன்சாரியிடம் பிரதமர் வருத்தம்
புதுதில்லி, மார்ச்.9 மாநிலங்களவையில் நேற்று
(மார்ச்.8)பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது,
சமாஜ்வாடி கட்சி எம்.பி., க்கள் மசோதாவின் நகல்களை கிழித்து சபாநாயகர்
ஹமீது அன்சாரியின் மீது வீசினர். அவரை தாக்கவும் முற்பட்டனர். இந்த
சம்பவத்துக்காக பிரதமர் மன்மோகன்சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்று
அன்சாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் வருத்தம்
தெரிவித்துள்ளார். இத்தகவலை இன்று (மார்ச்9) குடியரசு துணை தலைவர்
அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டபோது சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை
தலைவர் அமீது அன்சாரியிடம் அவர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர்.
எம்.பி.க்கள் கமல் அக்தர், நந்தகிஷோர் யாதவ் ஆகியோர் அமீது அன்சாரியை
தாக்குவதற்கு முயற்சித்தனர். மாநிலங்களவை தலைவரை தாக்குவதற்கு முயற்சி
நடந்தது இதுதான் முதல்முறை. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச்
செய்தது. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவை தலைவர்
அமீது அன்சாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக
வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|