அறிமுக நாயகனின் அடுத்த படம்
அறிமுக நாயகன் குமரன், நடிக்கும் 'தைரியம்' என்ற விளம்பரத்தோடு பல
தொலைக்காட்சிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது, 'தைரியம்' படத்தின்
விளம்பரம். சினிமாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாத ஒரு
தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும் இருந்த குமரன், தைரியமாக ஒரு படத்தை
தயாரித்து அதில் தானே நாயகனாகவும் நடித்தார். படத்தின் இயக்குநர் இவரை
ஏமாற்றிய பிறகு, படத்தின் அனைத்துப் பொருப்புகளையும் தானே ஏற்று
படத்தையும் வெற்றிகரமாக வெளியிட்டு விட்டார்.முதல் படத்திலே
பட்டதெல்லாம் போதும் இனி சினிமா வேண்டாம் என்று குமரன், நினைத்திருப்பார்.
என்று நினைத்தவர்களுக்கு இதோ வந்து விட்டேன் என்று தனது அடுத்த படத்திற்கு
தயாராகிவிட்டார் இந்த தைரியமான நாயகன்.சூர்யா-ஜோதிகாவை வைத்து
'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா, தான் குமரன் நடிக்கும்
அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர். இந்த படத்தையும் தானே
தயாரிக்கும் குமரன், இந்த முறை முதல் படத்தில் நடந்தது போன்ற தவறு ஏதும்
நடக்கக்கூடாது என்று முன்னேற்பாடுடன் களத்தில் இறங்கியுள்ளார்.
|