பங்கு வர்த்தகம்.
மும்பை வாரத்தின் தொடக்கத்திலிருந்து பங்கு
வர்த்தகத்தில் ஏற்பட்டு வந்த சரிவை, சற்றே சரிகட்டும் வகையில்
இன்றைய வர்த்தகம் மும்பை சென்செக்ஸ் மற்றும் தேசிய நிப்டியில்
சிறிதே ஏற்றம் கண்டது.
இருப்பினும் அனுமானத்திற்கு அப்பாற்பட்டதாய் சந்தை வர்த்தகம்
இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அரசியலில் நிலவும்
நிரந்தரமற்ற தன்மை,சந்தையை வெகுவாக பாதித்துவருவதாக சந்தை
யாளர்கள் கருதுகின்றனர். வாரத்திற்கு வாரம் எகிறிவரும் பணவீக்க
அளவு தற்போது 11.63% சதவீதமாக உள்ளது. இந்த அளவு ஜூலை
மாதம் கையிருப்பு திட்டம் அறிவிக்கப்படும் முன் பணவீக்கம் 12% ஆக
உயர்ந்து விடக் கூடும் என்று அஞ்சப்படுவதால் அரசு உடனடியாக
இதற்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என பொருளாதார
நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|